The News Sponsor By
feature-top
feature-top

மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் சிறைச்சாலைகள் உள்ளது. இங்கு இருக்கும் பெண் கைதிகள் திடீரென கர்ப்பம் தரித்து வரும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அரங்கேறி வந்துள்ளது. குறிப்பாக இதுவரை ஒட்டுமொத்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில் சுமார் 196 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த நிலையில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தின் நண்பனாக கருதப்படும் அமிக்ஸ் கியூரி (Amicus curiae) சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், விசாரணைக்காக சிறையில் இருக்கும்போதே பெண் கைதிகள் கர்ப்பமாகின்றனர். இது ஒரு பகுதி மட்டுமல்லாமல் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் அரங்கேறி வருகிறது. சுமார் 196 குழந்தைகள் சிறையிலேயே பிறந்து காவலில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பெண் கைதிகள் இருக்கும் சிறை பகுதிக்கு ஆண் சிறைச்சாலை ஊழியர்கள் செல்வதை தடை செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

feature-top
feature-top